திருக்கோடிக்குழகர் அருள்மிகு அமுதகடநாதர். அருள்மிகு மையார்தடங்கணம்மை. திருக்கோவில்
திருக்கோடிக்குழகர்
பண் - கொல்லி
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - அமுதகடநாதர்.
தேவியார் - மையார்தடங்கணம்மை.
320 கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே. 7.032.1
கோடிக்குழகரே, அடிகளே, கடற்காற்றுக் கடிதாய் வந்து வீச, இக் கடற்கரையின்மேல், உமக்கு, யார் துணையாய் இருக்க இருக்கின்றீர்? நீர் இங்குத் தனித்து இருத்தலையே கொடியேனது கண்கள் கண்டன; குடிதான் வேறோர் இடத்திலே இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ? சொல்லீர்.
திருச்சிற்றம்பலம்
Comments
Post a Comment