சேலம் ஸ்ரீ சுகவனேசுவர் திருக்கோயில் பாவங்கள் அனைத்தையும் போக்கி, திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் அருளும் சேலம் ஸ்ரீ சுகவனேசுவர். சேலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருத்தலம். நான்கு யுகங்களாகப் பிரசித்திப் பெற்ற திருத்தலம். திருத யுகத்தில் நான்மறைகள் அரச மர வடிவில் பூஜித்து தேவர்களின் பாபங்களைப் போக்கியதால் பாபநாசம் என்றும், துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம் என்றும், திரேதாயுகத்தில் காமதேனு பசு வழிபட்டதால் பட்டீசுரம் என்றும், கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகபிரம்ம மகரிஷி வழிபட்டதால் சுகவனம் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டதால் மும்முடித் தலைவாயில் என்றும் சிறப்புப் பெற்ற திருத்தலம். கவனேசுவரர், கரபுரநாதர், வீரட்டேசுவரர், பீமேசுவரர், திருவேலிநாதர் என்ற ஐந்து அட்சரங்களைப் பெற்ற திருமணிமுத்தாறு நதிக்கரையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளி பஞ்சாட்சர நாதம் என்னும் சிறப்பைப் பெற்ற திருத்தலம். ஒரு முறை பிரம்மா படைப்பின் இரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, சுகமுனிவர் பிரம்மா கூறிய அந்த படைப்பின் இரகசியத்தை ...