Posts

Showing posts from January, 2022

சூலமங்கை ஸ்ரீ அலங்காரவல்லீ அம்பிகா ஸமேத ஸ்ரீ கிருத்திவாகேஸ்வர ஸ்வாமி

Image
தை அமாவாசை சூல விரதத்தை முன்னிட்டு #சூலமங்கை காலை மஹா அபிஷேகத்திற்கு பிறகு ஸ்ரீ அலங்காரவல்லீ அம்பிகா ஸமேத ஸ்ரீ கிருத்திவாகேஸ்வர ஸ்வாமி மற்றும் கோஷ்ட மூர்த்திகளுக்கு நடைபெற்ற சிறப்பு அலங்காரம்.

Sankara Narayanar Temple Amman Temple Sani Maha prathosam Alangram & Arthi...

Image
Today 29.01.21 Sankara Narayanar Temple Amman Temple Sani Maha prathosam Alangram & Arthi...

மேச்சேரி பத்ரகாளி அம்மன் தரிசனம்

Image
மேச்சேரி பத்ரகாளி அம்மன் தரிசனம் 

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-தை தெப்பத்திருவிழா 8ம் நாள் காலை திருவூடல்

Image
மதுரை ஸ்ரீ  மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்-தை தெப்பத்திருவிழா 8ம் நாள்  காலை திருவூடல் ,மட்டையடி உற்சவம்..ஸ்ரீ நடராஜர், சிவகாமி அம்மன், சுந்தரர் புறப்பாடு சுவாமி அம்மன் தங்க பல்லக்கு..

Sri Srinivasa perumaal templeAnd Sri Padmavati thaayaar,Veerapuram villageThirukalukundram

Image
Sri Srinivasa perumaal temple And Sri Padmavati thaayaar Veerapuram village Thirukalukundram

திருச்சிமாவட்டம் சமயபுரம் ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் திருக்கோயிலில் (14.01.2022) இன்று தைப்பூசத் திருவிழாவின் 6 ஆம் திருநாள் மர யானை வாகனம்

Image
திருச்சிமாவட்டம்  சமயபுரம்  ஸ்ரீஅருள்மிகுமாரியம்மன் திருக்கோயிலில் (14.01.2022) இன்று தைப்பூசத் திருவிழாவின் 6 ஆம் திருநாள் மர யானை வாகனத்தில்  சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பிரகாரத்தில் பக்தர்கள் அனுமதி இல்லாமல் புறப்பாடு நடைபெற்றது..

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று மார்கழி ‌29 வியாழக்கிழமை 13.1.2022 வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாயில் திறப்பு

Image
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இன்று மார்கழி ‌29 வியாழக்கிழமை 13.1.2022 வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாயில் திறப்பு அதிகாலை  வைகுந்த வாயில் தீபாரதனைக்கு பின் திறக்கப்பட்டது முன்னதாக அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி சமேத வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பூக்கள் அலங்காரம்

Image
திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா பூக்கள் அலங்காரம் 

மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் - தை உற்சவம் 2022 - ஆறாம் திருநாள் - மாலை - சுவாமி அம்பாள் ரிஷப வாகனம்

Image
மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வராள் - தை உற்சவம் 2022 - ஆறாம் திருநாள் - மாலை - சுவாமி அம்பாள் ரிஷப வாகனம்

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்

Image
அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்

, . அருள்மிகு அந்தப்புர நாயகி உடனுறை சேஷபுரீசுவரர் திருக்கோவில் இராப்பட்டீஸ்வரம்,திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம்

Image
திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், இராப்பட்டீஸ்வரம் சிவன்கோயில் இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். நல்லூரே நன்றாக நட்டமிட்டு  நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப் பல்லூரும் பலி திரிந்து சேற்றூர் மீதே  பலர் காணத் தலையாலங்காட்டின் ஊடே இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி  இராப் பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண  இறைப் பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.     திருநாவுக்கரசரின் 6ம்  திருமுறையில் ௨௫ 25  வது பதிகத்தில் ௰ 10வது பாடலில் இந்த வைப்பு தலத்தை பற்றிய குறிப்பு உள்ளது இது திருவாரூர் தலத்துக்குரிய பதிகமாகும். கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் வடக்கில் செல்லும் சாலையில் உள்ளது கோயில். இக்கோயிலின் வடமேற்கில் பாடல் பெற்ற தலம் பெருவேளூர் உள்ளது வடகிழக்கில் கங்காதர ஈஸ்வரர் கோயில் உள்ளது. தெற்கில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது இவை அனைத்தும் சேர்ந்தே மணக்கால் அய்யம்பேட்டை என்று அழைக்கின்றனர்.  இறைவன் - சேஷபுரீசுவரர்....

Arulmigu Malaikoluntheeswarar Temple ,Kunoor கொழுந்திஸ்வரர் திருக்கோவில். குன்னூர்.விருதுநகர் மாவட்டம்

Image
ஓம் வடிவில் அமைந்துள்ள மலை. சகல நோய்களுக்கும் நிவாரணம் தரும் குடவறை கோவில் மலைக் கொழுந்திஸ்வரர் திருக்கோவில். குன்னூர். விருதுநகர் மாவட்டம். ***************************************** மூலவர் :கொழுந்தீஸ்வரர் அன்னை:மரகதவள்ளி. தலவிருட்சம் :இலுப்பை. தீர்த்தம் ::அர்ச்சுணண் சுணை தீர்த்தம் சிறப்புகள் : மலைமீது அமைந்துள்ள அழகிய குடவறை கோவில். பல்லவர் காலத்தில் உருவான மிகப்பழமையான கோவில். மூலவர்  நந்தி  நடராஜர் தட்சிணாமூர்த்தி விநாயகர் போன்ற தெய்வங்கள் குடவறை உள்ளே காணப்படுகிறது. அன்னை மரகதவள்ளி தனியே  வெளியில் இருந்து அருள்பாளிக்கிறார். அர்ச்சுணன் எய்த அம்பு இந்த மலையில் பட்டு தண்ணீர் பீறிட்டது.அதுவே வற்றாத சுணையாக மலையில் உள்ளது.இதையே இறைவனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். திருவோட்டுக்கேணி என்ற மற்றொரு தீர்த்தமும் உள்ளது. இவ்விரு தீர்த்தமும் சகல நோய்ளுக்கும் அருமருந்தாய் இருப்பதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த மலையானது ஓம் வடிவத்தில் அமைந்திருப்பது மிகச்சிறப்பு.  மலையின் மீது அமைந்துள்ள மிக அழகான கோவில்.அனைவரும் தரிசிக்க வேண்டிய கோவில். வி...

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி தைப்பூசபெருவிழா..

Image
திருவிடைமருதூர்  மகாலிங்கசுவாமி தைப்பூசபெருவிழா..2022...மூன்றாம் நாள்(11.01.2022) சுவாமி மகாகாயன் எனும் பூத வாகனத்திலும் அம்பாள் பிரம்மதேகினி எனும் பூதகி வாகனத்திலும் திருவீதி உலா கக்ஷி.

திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில் இன்று மார்கழி. -26 சூரிய , சந்திர பிரபை திருவீதியுலா

Image
திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி திருக்கோவில் இன்று மார்கழி. -26 சூரிய , சந்திர பிரபை திருவீதியுலா

நந்தீஸ்வரர்

Image
நந்தீஸ்வரர் பற்றிய சில அபூர்வ தகவல்கள் சிவாலயத்திற்குள் நுழைந்ததும் விநாயகப் பெருமானை வழிபட்டு, கொடிமரத்திற்கு வணக்கம் செலுத்திவிட்டு, நந்தியெம்பெருமானை வேண்டிக் கொண்ட பின்னர் தான் சிவபெருமானை வழிபட வேண்டும் என்பது விதியாகும். கொடிமரத்திற்கும், நந்திக்கும் இடையில் நந்தியின் பின்புறம் இருந்து இறைவனை நோக்கி வழிபடவேண்டும். இந்த நந்தியை அதிகார நந்தி என்பார்கள். இவர் பூவுலகில் கடுமையாகத் தவம் செய்து பதினாறு வரங்களைப் பெற்றவர். சிவகணங்களின் தலைவர். நந்தியானவர் சிலதிருத்தலங்களில் கருவறைக்கு நேராக இல்லாமல், சற்றே விலகியபடி காட்சியளிப்பார். அப்படிப்பட்ட தலங்கள் திருப்பூங்கூர், திருப்பூந்துருத்தி ஆகியவையாகும். இவற்றில் இருந்தும் கொஞ்சம் வித்தியாசமாகக் காணப்படுகிறார், வட ஆற்காடு மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோவில் உள்ள நந்தி. இவர் இறைவனுக்குப் புறமுதுகு காட்டியபடி, நின்ற நிலையில் காணப்படுகிறார். இதற்கு ஒரு காரணமும் கூறப்படுகிறது. ஒருமுறை கோவில் அர்ச்சகர், ஸ்வாமிக்கு அபிஷேகத் தீர்த்தம் எடுத்து வந்தபோது அவரை கஞ்சன் என்ற அரக்கன் வழி மறித்துத் துன்புறுத்தினான்.    அர்ச்சகர...

தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ சங்கரராமேஸ்வரர்

Image
தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் அம்பாள் சமேத ஸ்ரீ சங்கரராமேஸ்வரர்

அருள்மிகு சந்திர சூடேஸ்வரர் திருக்கோவில் ஓசூர்

Image
மும்மூர்த்திகளையும் ஒரே நாளில் வணங்க வேண்டுமா? கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மூன்று மலைக் குன்றுகள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.  அவற்றில் முறையே  பிரம்மா, விஷ்ணு, சிவன் குடிகொண்டுள்ளனர்.   இவற்றில், முதல் குற்றில் பிரம்மாவும், இரண்டாவது குற்றில் விஷ்ணுவும், மூன்றாவது குன்றில் சிவனும் அருள்பாலிக்கன்றனர். பிரம்மன் அமர்ந்துள்ள மலை  பிரம்ம  மலை என்றும், விஷ்ணு அமர்ந்துள்ள மலை பெருமாள் மலை என்றும், சிவபெருமான் அமர்ந்துள்ள மலை ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் மலை என்றும் அழைக்கப்படுகின்றன.   இங்கு வருபவர்கள், ஒரே நாளில் மும்மூர்த்திகளையும் வணங்கும் வாய்ப்பினைப் பெறுகின்றனர்.  இதன் மூலம், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களின் மும்மூர்த்திகளிள் அருளையும்  முழுமையாகப் பெறலாம். வாருங்கள் ஓசூர் திருத்தலத்திற்கு.   ஓம் நமோ நாராயணா ! ஓம் நமசிவாய !!

கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில் வீரபாண்டி.தேனி மாவட்டம்

Image
கண்,பார்வை கோளாறுகள் நிவர்த்தி ஆகும் அழகிய திருத்தலம். கண்ணீஸ்வரமுடையார் திருக்கோவில்  வீரபாண்டி. தேனி மாவட்டம். ******************************************** மூலவர் :கண்ணீஸ்வரமுடையார். அன்னை: அறம்வளர்த்த நாயகி. தீர்த்தம்: முல்லையாறு. தலசிறப்பு ::   மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் நோய்களை தீர்க்கும் மூலிகை சக்தி கொண்ட முல்லையாற்றின் கரையில் அமைந்துள்ள அழகான ஆலயம். கண் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் சக்தியுள்ள தலம். பாண்டிய நாட்டை ஆண்டுவந்த வீரபாண்டிய மன்னனுக்கு முன்வினைப்பயனால் இடையில் பார்வை பறிபோனது. பார்வையோடு இருந்த அவனுக்கு இடையில் பார்வை பறிபோனது மிகுந்த மனவேதனையை தந்தது.  அவன் எம்பெருமான் சிவனை நினைத்து மனமுருக வேண்டி வந்தான்.அவனின் வேண்டுதலுக்கு மனமிறங்கிய இறைவன் கனவில் தோன்றி முல்லைப்பெரியாறு ஆற்றின் அருகே உள்ள கௌமாரி அம்மனை வழிபட அறிவுறுத்தினார். அதன்படி அம்மனை வணங்கிட ஒரு கண்ணில் பார்வை கிடைத்தது.அம்மன் அவனிடம்  தான் தினமும் வணங்கும் சிவலிங்கத்தை வழிபட கூறினாள்.அதன்படி பக்தியோடு சிவலிங்க வழிபாடு செய்து வந்தான்.பெரிய...

பயற்ணீஸ்வரர் திருக்கோவில்உடையார்பாளயம்அரியலூர் மாவட்டம்.

Image
பயற்ணீஸ்வரர் திருக்கோவில் உடையார்பாளயம் அரியலூர் மாவட்டம்.  மூலவர் : பயற்ணீஸ்வரர். அன்னை :நறுமலர் பூங்குழலி. தலவிருட்சம் : மகிழமரம். தலசிறப்பு ;;  தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களில் உடையார்பாளையம் ஜமீன் மிகுந்த சிறப்பை உடையது. ஆலயம் 1400 ஆண்டுகள்  பழமையானது. இக்கோவிலில் உள்ள தெப்பக்குளம் வில் வடிவில் உள்ளது. எப்போதும் தண்ணிர் வற்றாத பெருமை உடையது.இக்கோவிலில் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும். அன்னியர் படையெடுப்பின் போது காஞ்சிபுரம் சிதம்பரம் போன்ற பல ஆலயங்களின் சிலைகள் இங்கு வைத்து பாதுகாக்கப்பட்டது. இத்தல இறைவன் மிளகை பயிராகச் செய்து திருவிளையாடல் புரிந்தவர். இதனால் இறைவன் பயற்ணீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகே 10 கிமீ தொலைவில் உள்ளது.அனைவரும் தரிசிக்க வேண்டிய அழகான அற்புதமான திருத்தலம்.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலம்சுழி வருணேஸ்வரர் சிவன்கோயில்

Image
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், திருவலம்சுழி வருணேஸ்வரர் சிவன்கோயில் Thiruvalanchuzhi Varuneswarar temple  கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் சாலையில் ஏழாவது கிமி-ல் உள்ளது திருவலம்சுழி. இங்கு பிரசித்தி பெற்றது கபர்தீஸ்வரர்/வெள்ளை பிள்ளையார்கோயில். இதே ஊரில் பிரதான சாலையில் சோழா ஓட்டலின் எதிரில் பெரிய தென்னம்தோப்பினுள் உள்ளார் இறைவன் வருணேஸ்வரர் பெரிய சிவாலயமாக இருந்து தற்போது லிங்கமூர்த்தியும் அவரின் எதிரில் நந்தியும்,  பைரவரும், ஒரு விநாயகரும் மட்டும் ஓர் தகர கொட்டகையில் உள்ளனர். உடைந்த நந்தியொன்று அருகில் கிடத்தப்பட்டுள்ளது.  லிங்கமூர்த்தியின் அளவினை வைத்து பார்த்தால் அவரது பழம் கோயில் எத்தனை பெரிதாய் இருந்திருக்கும் என எண்ணி வியக்கவேண்டியுள்ளது. “எல்லாம் சில காலம்” என்பது இறைவனுக்கும் சேர்த்து தான் போலிருக்கிறது.  #வாருங்கள்கிராமசிவாலயம்செல்வோம்

அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில், திருவொற்றியூர் குப்பம், திருவொற்றியூர்,

Image
அருள்மிகு பட்டினத்தார் திருக்கோயில்,  மாநில நெடுஞ்சாலை 114, திருவொற்றியூர் குப்பம்,  திருவொற்றியூர்,  சென்னை 600019  *இத்திருக்கோயில் திருவொற்றியூரில் எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையில் அமைந்து உள்ளது.  *இதுவே  "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என ராஜ வாழ்க்கையை துறந்த ‘பட்டினத்தார்’ முக்தி அடைந்த தலம். *திருவெண்காட்டில் வணிகர் குடும்பத்தில் பிறந்து காவிரிப்பூம்பட்டினத்தில்  வணிகத்தில் கொடி கட்டிப் பறந்து குபேரன் போல் வாழ்ந்தவர் பட்டினத்தார்.  *இயற்கையில் பிள்ளை இல்லாத அவருக்கு இறையருளால் வந்து சேர்ந்தான் ஒரு வளர்ப்பு மகன். அவனுக்கு மருதவாணன் என பெயரிட்டு மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர்.  *வளர்ந்து பெரியவனானதும் அவன் கடல் கடந்து பொருள் சேர்க்கப் போனான். கடல் வாணிபம் முடிந்து கரைசேர்ந்த அவன் கொண்டு வந்த பெட்டியில்  ஓலைகீற்றில் எழுதி இருந்த வாசகம் பட்டினத்தாரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டிப்போட்டது. அதில் எழுதி இருந்த ‘காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்ற வாசகத்தை படித்த மறு கணம் தனது குபேர வாழ்வை துறந்து பட்டுப்பீத...

திருவல்லிக்கேணி அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில்

Image
திருவல்லிக்கேணி அருள்மிகு ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில்  மூலவர் - வேங்கட கிருஷ்ணன் ருக்குமணி பிராட்டியுடன் பலராமன், ஸாத்யகி, அநிருத்தன், பிரத்யுமனன் இவர்களோடு கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். தாயார் - வேதவல்லி உற்சவர் - பார்த்தசாரதி விமானம் - ஆநந்த விமானம், ப்ரணவ விமானம், புஷ்ப விமானம், சேஷ விமானம், தைவீக விமானம். தீர்த்தம் - கைரவிணி (அல்லிக்கேணி) இத்தீர்த்தத்தில் இந்திர, ஸோம, அக்கினி, மீன, விஷ்ணு என்ற 5 தீர்த்தங்கள் சூழ்ந்துள்ளதாய் ஐதீகம். கடலுக்கு மிக அருகாமையில் இருந்தாலும் மீன்கள் இதில் வசிப்பதில்லை அவ்வளவு புனிதமானது இந்த தீர்த்தம். பெருமாளின் திருமஞ்சனத்திற்கும் இதுவே தீர்த்தம்.  நாமாவளி - ஸ்ரீ ருக்மணி ஸமேத ஸ்ரீ வேங்கடேகிருஷ்ணாய நமஹ பாசுரம் : விற்பெருவிழவும் கஞ்சனும்மல்லும் வேழமும்பாகனும்வீழ *  செற்றவன்தன்னை * புரமெரிசெய்த  சிவனுறுதுயர்களைதேவை *  பற்றலர்வீயக்கோல் கையில்கொண்டு பார்த்தன்றன்தேர்முன்நின்றானை *  சிற்றவைபணியால்முடிதுறந் தானைத் திருவல்லிக்கேணிக்கண்டேனே பெரியதிருமொழி (1068) பேயாழ்வார் -1,  திருமழிசை ஆழ்வார் - 1,  ...

அருள்மிகு ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் திருக்கோயில் - திருநீர்மலை

Image
அருள்மிகு ஸ்ரீ நீர்வண்ணப் பெருமாள் திருக்கோயில் - திருநீர்மலை 🕉️🐚🙏 சென்னை பல்லாவரத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது. 'மாமலையாவது திருநீர்மலையே' என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.  ஸ்தல வரலாறு : ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார்.  இவரே இங்கு மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு முனிவர், மற்றும் மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர்.  இத்தலத்திலுள்ள  பெருமாளைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந...