Posts

Sankarankovil Sankara Narayanar Temple prathosam

Image
 Sankarankovil Sankara Narayanar Temple prathosam  Sankarankovil Sankara Narayanar Temple prathosam 

திருமாந்துறை ஸ்ரீ பாலாம்பிகை அம்மையுடன் ஸ்ரீ ஆம்ரவனேஸ்வரர் திருத்தலம்.

Image
செய்த தவறுக்கு மனம் வருத்தம் கொண்டால் மன்னிப்பு உண்டு . . . திரு அண்ணாமலையில் சிவபெருமானின் முடியைக் கண்டதாகப் பொய் கூறிய நான் முகனின் சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம். தனது மரண பயம் நீங்க மார்க்கண்டேயன் தவமிருந்து மரண பயம் நீங்கப்பெற்ற திருத்தலம். தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால் சூரியனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம். சூரியனின் மனைவி சமுக்யாதேவி  தனது கணவனின் உக்கிரமமான வெப்பத்தை பொறுத்துக்கொள்ள தவமிருந்த திருத்தலம். அகலிகையைத் தொட்டதால் ஏற்பட்ட சாபத்தை இந்திரன் நீங்கப்பெற்ற திருத்தலம். தாய்-தந்தையை இழந்த மானுக்கு அம்மையப்பன் மான் வடிவில் வந்து பசி தீர்த்த திருத்தலம். ஆதிசங்கரரும், மிருகண்டு முனிவரும் அம்மையப்பனை வணங்கி ஈசனிடம் உபதேசம் பெற்ற திருத்தலம். ககோள முனிவரின் மனைவியும், மருதாந்தகனின் தாயுமான லீலாவதி சாபம் நீங்கப் பெற்ற திருத்தலம்.   மூல நட்சத்திரத்திற்கான பரிகாரத் திருத்தலம். 1800 ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த திருத்தலம். பல சோழ மன்னர்களின் கல்வெட்டுக்களைத் தாங்கி நிற்கும் திருத்தலம். கோச்செங்கண் சோழன் திருப்பணி செய்த திருத்தலம். ஸ்...

சேலம் ஸ்ரீ சுகவனேசுவர் திருக்கோயில்

Image
சேலம் ஸ்ரீ சுகவனேசுவர் திருக்கோயில் பாவங்கள் அனைத்தையும் போக்கி, திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் அருளும் சேலம் ஸ்ரீ சுகவனேசுவர். சேலம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள திருத்தலம்.   நான்கு யுகங்களாகப் பிரசித்திப் பெற்ற திருத்தலம். திருத யுகத்தில் நான்மறைகள் அரச மர வடிவில் பூஜித்து தேவர்களின் பாபங்களைப் போக்கியதால் பாபநாசம் என்றும், துவாபரயுகத்தில் ஆதிசேஷன் வழிபட்டதால் நாகீச்சுரம் என்றும், திரேதாயுகத்தில் காமதேனு பசு வழிபட்டதால் பட்டீசுரம் என்றும், கலியுகத்தில் கிளி உருவம் கொண்ட சுகபிரம்ம மகரிஷி வழிபட்டதால் சுகவனம் என்றும், சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்டதால் மும்முடித் தலைவாயில் என்றும் சிறப்புப் பெற்ற திருத்தலம்.   கவனேசுவரர், கரபுரநாதர், வீரட்டேசுவரர், பீமேசுவரர், திருவேலிநாதர் என்ற ஐந்து அட்சரங்களைப் பெற்ற திருமணிமுத்தாறு நதிக்கரையில் சுயம்புலிங்கமாக எழுந்தருளி  பஞ்சாட்சர நாதம் என்னும் சிறப்பைப் பெற்ற திருத்தலம். ஒரு முறை பிரம்மா படைப்பின் இரகசியத்தை சுகமுனிவரிடம் கூற, சுகமுனிவர் பிரம்மா கூறிய அந்த படைப்பின் இரகசியத்தை ...

அருள்மிகு ஏகாம்பரேஸ்வர் திருக்கோயில்i

Image
🦉உங்களது பணப்பிரச்சனைகள் தீர  ஒருமுறையாவது செட்டிகுளம் அருள்மிகு காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சென்று வாருங்கள்... 🦉12 ராசிகளுக்கு உரிய குபேரர் இங்கு உள்ளார். 🦉பூரட்டாதி நட்சத்திரம் அன்று குபேரருக்கு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெறும். 🦉இக்கோயிலுக்கு மிக அருகில் சிறிய குன்றின் மேல் முருகப்பெருமான் கையில் கரும்புடன் இருக்கின்றார். மிக சக்தியுள்ள வரப்பிரசாதி. 🦉வாழ்வில் ஒவ்வொருவரும். தரிசிக்க வேண்டிய அற்புத ஸ்தலம். 🦉இறைவன் : ஏகாம்பரநாதர் இறைவி : காமாட்சியம்மன் 🦉தலவிருட்சம் : வில்வ மரம் 🦉தீர்த்தம் : பஞ்சநதி தீர்த்தக்குளம் 🦉தலவரலாற்றுச்சிறப்பு முன்காலத்தில் இத்தலமானது கடம்ப மரங்கள் நிறைந்த அடர்ந்த கடம்ப வனமாக இருந்துள்ளது. உறையூரை தலைநகரமாகக் கொண்டுசோழமன்னன் ஆட்சி செய்த போது, வணிகன் ஒருவன் உறையூரிலிருந்து வணிக நிமித்தமாக வடக்கு நோக்கி பயணத்தை தொடங்கினான். அவ்வணிகன் இக்கடம்பவனத்தை வந்தடைந்தபோது மாலைப்பொழுதாகி பின் இருள் சூழ்ந்து விட்டதால் மேற்கொண்டு பயணம் மேற்கொள்ள இயலாமல், இக்கடம்ப வனத்திலேயே தங்க தீர்மானித்து அங்கிருந்த ஆலமரத்தின் மீது ஏறி அமர்ந்து சாய...

Rameswaram Sri Parvadhavardhini Ambala, Sri Ramanathaswamy Procession in Golden Rishbam for Astami

Image
இராமேசுவரம் அஷ்டமி_சப்பரம் இன்று 27.12.2021 அன்னை மலைவளர்காதலி (பர்வதவர்த்தினி),  அருள்மிகு இராமநாதசுவாமி தங்கரிஷபவாகனத்தில் திருவீதியுலா. Rameswaram Sri Parvadhavardhini Ambala, Sri Ramanathaswamy Procession in Golden Rishbam for Astami

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள அருள்மிகு காலபைரவர்

Image
 காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் உள்ள அருள்மிகு காலபைரவர் உற்சவருக்கு தேய்பிறை அஷ்டமியை யொட்டி அலங்காரம் அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திருக்கொள்ளம்பூதூா்.ஸ்ரீ வில்வவனநாதா்,வில்வாரண்யேஸ்வரா். திருக்கோவில்

Image
திருத்தலம்: திருக்கொள்ளம்பூதூா். (திருக்களம்புதூா், திருக்களம்பூா்) ______________________ சுவாமி: ஸ்ரீ வில்வவனநாதா், வில்வாரண்யேஸ்வரா். அம்பாள்: ஸ்ரீ  சௌந்திரநாயகி. தலவிருட்சம்: வில்வம்  (கூவிளம்). தீா்த்தம்: பிரம தீா்த்தம். (கோவிலுக்கு முன்னால் உள்ளது). ----------------------------------------- திருஞானசம்பந்தா் அருளிய தல திருமுறைப் பாடல்: ---------------------------------- மூன்றாம் திருமுறை; ------------------------------------ பண்:  காந்தார பஞ்சமம். ------------------------------- கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூா் நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்  செல்ல வுந்துக சிந்தை யாா்தொழ நல்கு மாறருள் நம்பனே. ஓடம் வந்தணையுங் கொள்ளம்பூதூா் ஆடல் பேணிய அடிகளை யுள்கச்  செல்ல வுந்துக சிந்தை யாா்தொழ நல்கு மாறருள் நம்பனே. திருச்சிற்றம்பலம். ______________________ குடவாசல் இருந்து தென்மேற்கே 6 கி.மீ. கும்பகோணம் குடவாசல் கொரடாச்சோி நகா்ப் பேருந்து எண் 45 இவ்வூா் வழியாகச் செல்கிறது. திருக்கொள்ளம்பூதூா், கூவிளவனம், பிரமவனம், பஞ்சாக்கரபுரம், காண்டீபவனம் வெட்டாற்றின் கரையில் இக்கோவ...